போப் பெனடிக்ட் XVI
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Benedict XVI பதினாறாம் ஆசீர்வாதப்பர் |
|
---|---|
பதினாறாம் ஆசீர்வாதப்பரின்சின்னம் |
|
இயற்பெயர் | ஜோசம் அலோய்சு ரட்சிங்கர் |
பாப்பரசு ஆரம்பம் | ஏப்ரல் 19, 2005 |
பாப்பரசு முடிவு | பதவியில் உள்ளார் |
முன்னிருந்தவர் | அருளப்பர் சின்னப்பர் II |
பின்வந்தவர் | பதவியில் உள்ளார் |
பிறப்பு | ஏப்ரல் 16, 1927 பவேரியா, யேர்மனி |
ஆசீர்வாதப்பர் என்ற பெயருடைய பாப்பரசர்கள் |
போப் பெனடிக்ட் XVI(பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர்), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது பாப்பரசராவார்.இவர் வத்திகான் இராட்சியதின் தலைவருமாவார். புதிய பாப்பரசர் 1927 ஏப்பிரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா,ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ரட்ஸிங்கர் என்பதாகும்.2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவயில் பாப்பரசராக தெரிவுசெய்யப்பட்டார்.தனது முன்னோரைப்போலவே பாப்பரசராக தேர்வு செய்யப்பட்டவுடன் பெயர்மாற்றம் செய்துக்கொண்டார். 2005 ஏப்பிரல் திங்கள் 24 ஆம் நாள் பாப்பரசராக தனது முதல் திவ்விய திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.2005 மே திங்கள் 7 ஆம் நாள் புனித யோவான் பசிலிகாவை (Basilica of St. John Lateran) பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் முன்னதாக முனிச் நகருக்கான காருதினாராக செயற்பட்டுவந்தார்.இவர் திருச்சபையின் 264 பாப்பரசர் இரண்டாம் அருள்ப்பர் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார்.