ஈசாக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈசாக்கு விவிலியத்தின் படி, ஆபிரகாமின் மகனும் யாக்கோபு ஏசா என்பவர்களின் தந்தையுமாவார். இப்பெயரின் பொருள் நகைத்தல் என்பதாகும். இவரது சரிதம் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளது.
[தொகு] பெயர்
ஈசாக்கின் தாயான சாராள் தான் குழந்தயைப் பெறப்போவதாக தூதர் அபிரகாமிடம் சொல்வதை கேட்டு தான் முதியவளாக இருந்தபடியாள் நகைத்தார். இதனால் குழந்தையை பெற்றவுடன் நகைத்தல் எனப் பொருள்பட ஈசாக்கு என பெயரிட்டார்.[1]
[தொகு] வாழ்கைச்சுறுக்கம்
ஈசாக்கு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஒரே குழந்தையாகும். அவ்ர்கள் இருவரும் மிக முதியவராக இருந்த போது ஈசாக்கு பிறந்தார். குழந்தை பிறந்து எட்டாவது நாளில் அபிரகாம் குழந்தைக்கு விருத்த சேதனம்பண்ணினார்.[2] ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து ஒன்றைக் கொடுத்தார்.
சாராள், அபிரகாமுக்கு அகார் என்ற எகிப்திய அடிமை பெண் மூலமாக பிறந்திருந்த மகனான இஸ்மாயில் மூலம் தனது மகனுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எண்ணி அவர்களை விரட்டி விடுமாறு அபிரகாமை வேண்டினார். கடவுளும் அபிரகமுக்கு இதயே சொல்ல அபிரகாம் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார்.[3]
ஈசாக்கு வளர்ந்து சுமார் 25 ஆவது அகவையை அடைந்தபோது, கடவுள் அபிரகாமை சோதிக்கும் நோக்கில், ஈசாக்கை பலியிட கட்டளையிடுகிறார். அபிரகாம் கடவுள் காட்டிய இடத்துக்குச் சென்று இசாக்கை கட்டி பலியிட ஆயத்தமான போது, தேவதூதன் அபிரகாமை தடுத்தார்.[4]
ஈசாக்கின் 40ஆவது அகவையில் அபிரகாம் தனது சேவகரான எலியேசரை மொசபத்தேமியாவுக்கு தனது மைத்துனரான லாபான் வீட்டுக்கு அனுப்பி, ஈசாக்கு ஒரு மனைவியை தேடினார். ரெபேக்காள் ஈசாக்கின் மனைவியாக அனுப்பப்பட்டார். ஈசாக்கு ரெபேக்காளை மணந்தார். சில காலம் குழந்தையற்றிருந்த ரெபேக்காள் கர்பவதியாகி இரட்டை குழந்தைகளை பெற்றார். அவர்களுக்கு ஏசா,யாக்கோபு என பெயரிட்டார். ஏசா ஈசாக்கின் ஆதரவையும் யாக்கோபு ரெபேக்காளின் ஆதரவையும் பெற்றனர்.
ஈசாக்கு முதியவனான போது (அகவை 137) அவரது கண்பார்வை மிகவும் கொன்றிக்காணப்பட்டது. அப்போது தனது மகன்களை ஆசிர்வதிக்கும் நோக்கில் மூத்தவனான ஏசாவை அழைத்தார், ஏசா அப்போது வேட்டையாட சென்றிருந்தார் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெபேக்காள் யாக்கோபை அனுப்பி மூத்த புதல்வனுக்குறிய ஆசீர்வதத்தை பெற்றுக் கொள்ள வைகிறாள். ஏசா வந்தபோது நடந்த்தை அறிந்த ஈசாக்கு ஏசாவுக்கு இரண்டாவது பிள்ளைக்காண ஆசிவாததை மட்டுமே கொடுக்கிறார். இதன் பிறகு சிலகாலம் வாழ்ந்த ஈசாக்கு தனது 180 ஆவது அகவையில் மரித்தார் அவர அவரது புதல்வர்கள் இருவரும் அடக்கம் செய்தனர்.[5]