ருக்மணி தேவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிங்களவர் பண்பாடு |
மொழி |
ருக்மணி தேவி | |
---|---|
சிங்கள நடிகை,பாடகி ருக்மணி தேவி
|
|
பிறப்பு | 1923,ஜனவரி 13 நுவரெலியா |
இறப்பு | 1978 |
பணி | நடிகை,பாடகி |
துணை | B.A.W ஜெயமன்னா |
ருக்மணி தேவி ஒரு சிங்களத் திரைப்பட நடிகையாவார்.ஆடல், பாடல், நடிப்பு எனப் பல்துறை ஆளுமையின் காரணமாக வெள்ளித்திரையின் நாயகி எனப் போற்றப்படுகிறார். ஜோன்.டி.டானியல்,ஹெலன்ரோஸ் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக 1923 ம் ஆண்டு ஜனவரி 15 ம் திகதி நுவரெலியாவில் பிறந்தார்.இவரின் தந்தையார் கொழும்புச் செட்டி சமுகத்தை சேர்ந்தவராவார்.தனது ஆரம்பப் படிப்பை கொழும்பு மத்தியூ பாடசாலையிலும், பின்னர் வெள்ளவத்தை கிளார்க் பாடசாலையிலும் பயின்றார். தனது 13 வது வயதிலே பள்ளி மேடை நாடங்களிலே கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார்,இதன் மூலம் இசைத்தொகுப்பிற்கு பாடல் பாடும் வாய்ப்பையும்,சினமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 1947 ல் வெளிவந்த முதல் சிங்கள திரைப்படமான கடவுன பொறந்துவ வில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி 84 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். இவற்றில் சில தமிழ் திரைப்படங்களும் அடங்கும். B.A.W ஜெயமன்னா எனும் படத் தயாரிப்பாளரை திருமணம் புரிந்துள்ளார். 1978 ம் ஆண்டு விபத்தின் மூலம் மரணமடைந்தார். சிங்கள கலையுலகத்தினர் இன்றும் இவரின் நினைவு தினத்தில் இவரை நினைவு கூர்வதுண்டு. இவர் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இவர் வாழ்ந்த வீடு தற்போது நூதனசாலையாகப் பராமரிக்கப்படுகிறது.