பதிற்றுப்பத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கியத்தில் உள்ள தலைப்புகள் | |
---|---|
சங்க இலக்கியம் | |
அகத்தியம் | தொல்காப்பியம் |
பதினெண் மேற்கணக்கு | |
எட்டுத்தொகை | |
ஐங்குறுநூறு | அகநானூறு |
புறநானூறு | கலித்தொகை |
குறுந்தொகை | நற்றிணை |
பரிபாடல் | பதிற்றுப்பத்து |
பத்துப்பாட்டு | |
திருமுருகாற்றுப்படை | குறிஞ்சிப் பாட்டு |
மலைபடுகடாம் | மதுரைக் காஞ்சி |
முல்லைப்பாட்டு | நெடுநல்வாடை |
பட்டினப் பாலை | பெரும்பாணாற்றுப்படை |
பொருநராற்றுப்படை | சிறுபாணாற்றுப்படை |
பதினெண் கீழ்க்கணக்கு | |
நாலடியார் | நான்மணிக்கடிகை |
இன்னா நாற்பது | இனியவை நாற்பது |
கார் நாற்பது | களவழி நாற்பது |
ஐந்திணை ஐம்பது | திணைமொழி ஐம்பது |
ஐந்திணை எழுபது | திணைமாலை நூற்றைம்பது |
திருக்குறள் | திரிகடுகம் |
ஆசாரக்கோவை | பழமொழி நானூறு |
சிறுபஞ்சமூலம் | முதுமொழிக்காஞ்சி |
ஏலாதி | கைந்நிலை |
சங்ககாலப் பண்பாடு | |
தமிழ்ச் சங்கம் | தமிழ் இலக்கியம் |
பண்டைத் தமிழ் இசை | சங்ககால நிலத்திணைகள் |
சங்க இலக்கியங்களில் தமிழர் வரலாறு | |
edit |
பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
பொருளடக்கம் |
[தொகு] வகை
இந்நூற்பாக்கள் புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றியது ஆகும். சேர மன்னர்களின் கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் விளக்குகின்றன.
[தொகு] காலம்
இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.
[தொகு] பாடல் தொகுதிகளின் பட்டியல்
பகுதி | பாடியவர் | பாடப்பட்ட சேர மன்னன் |
முதல் பத்து |
- |
- |
இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் |
மூன்றாம் பத்து | பாலைக் கௌதமனார் | இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் |
நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் |
ஐந்தாம் பத்து | பரணார் | கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் |
ஆறாம் பத்து | காக்கைபாடினியார் (நச்செள்ளையார்) | ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் |
ஏழாம் பத்து | கபிலர் | செல்வக் கடுங்கோ வாழியாதன் |
எட்டாம் பத்து | அரிசில்கிழார் | தகடூர் அறிந்த பெருஞ்சேரலிரும்பொறை |
ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர்க் கிழார் | குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை |
பத்தாம் பத்து |
- |
- |
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- சங்க இலக்கியம்
- ஏனைய எட்டுத்தொகை நூல்கள்