சேரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட வம்சத்தைச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர்.
தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரையையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).