ஆலிஸின் அற்புத உலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆலிஸின் அற்புத உலகம் (ஆங்கிலத்தில் Alice's Adventures in Wonderland என்றும் Alice in Wonderland என்றும் அழைக்கப்படுகிறது), பிரித்தானிய கணிதவல்லுனரும் புகழ் பெற்ற எழுத்தாளருமான, லூயி கரோலினால் எழுதப்பட்ட நூல். இது குழந்தைகளுக்கான இலக்கியத்தில் மிகச் சிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது. ஆலிஸின் அற்புத உலகம், குழந்தைகளுக்கான படைப்பு என்று அழைக்கப்பட்டாலும், இதில் ஊடும் மெல்லிய நகைச்சுவையும், வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாட்டை அறியத்துடிக்கும் கேள்விகளை பூடகமாக வெளிப்படுத்துவதாலும், இது ஒரு செவ்விலக்கியமாகக் கருதப்பட்டு, அனைத்து வயதினராலும் விரும்பிப் படிக்கப் படுகிறது.