ஆனந்த ரங்கம் பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆனந்த ரங்கம் பிள்ளை (மார்ச் 3, 1709 - ஜனவரி 10, 1761) சென்னையில் உள்ள அயனாவரத்தில் பிறந்தார். அவருடைய 15ம் வயதில் தந்தை திருவேங்கடம் பிள்ளையை இழந்தார். பின்பு பாண்டிச்சேரிக்குச் சென்று வாழ்க்கையைத் தொடங்கினார். செங்கல்பட்டு சேஷாத்ரி பிள்ளையின் மகள் மங்கதாயி அம்மாளை மணம் செய்து கொண்டார். 3 மகள்களும், 2 பையன்களும் பெற்றார். பாண்டிசேரி பிரெஞ்சு அரசாங்கத்திற்கு துபாஷியாக வேலை செய்தார்.
[தொகு] வேலையும், புகழும்
இவர் புகழ், இவர் தமிழில் எழுதிய நாட்குறிப்புக்களால் ஆகும். நாட்குறிப்பு வைத்து, வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்வது, பழைய இந்தியாவில் இல்லை. தமிழ் இலக்கிய வகைகளில் புதுப் பகுதியை நமக்கு தந்தளித்தார். நாட்குறிப்பு இலக்கியத்தை இவர்தான் ஆரம்பித்தார் எனச் சொல்லமுடியாது; ஆனால் இவருடைய நாட்குறிப்புக்களே முதன்முறையாக நமக்குக் கிடைத்துள்ளன. அவருக்கு முன், குருவப்பப் பிள்ளை தமிழில் நாட்குறிப்பு எழுதியதாக நம்பப் படுகிறது; ஆனால் அது மறைந்து விட்டது.
ஆ.ர.பிள்ளை துபாஷ் ஆனதால் பிரெஞ்சு மொழியில் திறமை பெற்றார். வேலை சாகசத்தால் பிரெஞ்சு அரசின் பிரதான முகவர் மற்றும் துபாஷ் பதவியை அடைந்தார். 18ம் நூற்றாண்டுத் தென்னிந்தியச் சரித்திரத்தைப் புரிந்து கொள்ள இவர் நாட்குறிப்புகள் இன்றியமையாதவை. பிரெஞ்சு கவர்னர் டூப்லேயின் அந்தரங்கப் பேச்சாளராகவும் ஆனார். டூப்ளே தன் அரசாங்க விவகாரங்களையும், வீட்டு விவகாரங்கலையும் மனது விட்டு இவரிடம் பேசினார். அந்த அளவு மற்றவர்களிடம் விசுவாசத்தைப் பெற்றார். இவர் நாட்குறிப்பு மூலம் நமக்கு 18ம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ சம்பவங்களைகளைப் பற்றியும் தெரிகிறது. சில சொற்களில் மற்றவர்களின் குணாதிசயங்களை விளக்கும் திறமை பெற்றிருந்தார்.
24 வருடம் அவர் எழுதிய நாட்குறிப்புகள் அவர் மறைந்து, 85 வருடம் கழித்துக் கிடைத்தன. நவீன தமிழ் இலக்கியத்தில் அவர் பங்கு முக்கியமானதாகும். அதனால்தான் அவரை, புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பீப்ஸுக்கு ஒப்பிடுகிறார்கள்.