மரூஉ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மரூஉ என்பது தமிழ் சொற்களில், குறிப்பாக பெயர்ச் சொற்களில், பெரிதும் மாற்றம் அடைந்து, மருவி, வழங்கும் சொல். பெயர்ச் சொற்களில் மரூஉ எடுத்துக்காட்டுக்கள்:
- தஞ்சாவூர் என்பது தஞ்சை ஆவது
- புதுச்சேரி என்பது புதுவை ஆவது
- சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க)
- உறையூர் என்பது உறந்தை ஆவது.
வினைச்சொற்களிலும் மரூஉ உண்டு. எடுத்துக்காட்டாக:
- வருகிறது என்பது வருகுது (நாமக்கல் கவிஞர் இரமலிங்கம் பிள்ளை அவர்களின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”)
போலி மரூஉ: இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துக்களில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக:
- சாம்பல் என்பது சாம்பர்