பிராமி அரிச்சுவடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிராமி அரிச்சுவடி கி.மு 500 அளவில் இந்தியாவில் புழக்கத்துக்கு வந்ததாகக் கருதப்படுகின்றது. கி.மு 272 தொடக்கம் கி.மு 232 வரை ஆண்ட அசோகப் பேரரசர் காலத்தில் வரையப்பட்டவையே முதல் பிராமிக் கல்வெட்டுக்களாகும். இது அபுகிடா (abugida) வகையைச் சார்ந்த அரிச்சுவடியாகும். மிகப்பெரும்பாலான இந்திய மொழிகளினதும், அண்டைய நாடுகளிலுள்ள வேறுபல மொழிகளினதும் அரிச்சுவடிகள் பிராமியிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டதாகப் பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிராமி அரிச்சுவடி செமிட்டிக் அரிச்சுவடியிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. பெரும்பாலான அபுகிடா வகை அரிச்சுவடிகளைப்போல ஒவ்வொரு எழுத்தும் உள்ளார்ந்த அகர மெய்யொலியைக் கொண்டுள்ளன. ஏனைய மெய்யொலிகள், அவ்வெழுத்துக்களுக்கு மேல், கீழ், வலப்புறம் அல்லது இடப்புறத்தில் மேலதிக குறியீடுகளைச் சேர்ப்பதுமூலம் பெறப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் தமிழ் மொழியை எழுதப் பயன்பட்ட, தமிழ்ப் பிராமி என்று வழங்கப்படும் அரிச்சுவடி, பிராமியிலிருந்து தமிழுக்குத் தேவையற்றவற்றை அகற்றியபின் பெறப்பட்டது என்பது பொதுவாக நிலவும் கருத்து.