நடனகோபால நாயகி சுவாமிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் (1843 - 1914) மதுரையின் ஜோதி என்றும் ஸவ்ராஷ்ட்ர ஆழ்வார் என்றும் போற்றப்படுபவர். இவரது இயற்பெயர் ராமபத்திரன் என்பதாகும். நாகலிங்க அடிகள் எனும் குருவிடம் 'சதானந்த அடிகள்' என்ற பட்டப்பெயர் பெற்றவர்.
தமது 71வது வயதில் 1914ம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசியன்று சமாதியடைந்தார். மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் அவரது சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமிகள் தமது தாய் மொழியான சௌராஷ்ட்ரத்திலும், தமிழிலும் பல பாடல்களை பாடியுள்ளார்.