சுசந்திகா ஜயசிங்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுசந்திகா ஜயசிங்க (பிறப்பு டிசம்பர் 17, 1975), இலங்கையைச் சேர்ந்த ஓர் ஓட்ட வீராங்கனை ஆவார். 100 மற்றும் 200 மீட்டர் குறுந்தூரப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றவர். 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். 1948 இன் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இலங்கையர் இவராவார்.
[தொகு] 15வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2006
டோஹாவில் நடைபெற்ற 15வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100மீ ஓட்டப் பந்தயத்தில் சுசந்திகா வெள்ளிப் பதக்கம், 200மீ பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் பெற்றார்.