சீதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சீதை இந்துக் கடவுள்களுள் ஒருவராவார். லட்சுமியின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். அவதாரமான இராமரின் மனைவியாக இவரை இராமாயணம் சித்தரிக்கிறது.
[தொகு] சீதையின் கதை
ஜனகர் சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் இவரை பூமாதேவியின் புதல்வியாக கூறுவதுண்டு. சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு சிவனால் வழங்கப்பட்ட வில்லில் வெற்றியுடன் நான் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் ராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை ராமன் நானேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை ராமரின் மனைவியானார்.
ராமர் காட்டுக்கு 14 வருடங்கள் வனவாசம் செய்த போது அவருடன் சீதையும் லட்சுமணனும் சென்றனர். அப்போது இலங்கை அரசனான ராவணன் சீதையை அபகரித்துச்சென்று தன் தலைநகரில் இருந்த அசோகவனத்தில் தங்க வைத்தான். பின்னர் ராமன் வானரங்களின் துணையுடன் ராவணனை வென்று சீதையை மீட்டார்.
வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியவுடன் ராமன் மன்னனானான், சீதை அரசியானாள். ஆனால் நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை ராமன் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த ராமன் சீதையை வால்மீகியின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். வால்மீகியில் ஆசிரமத்தில் சீதைக்கு லவன், குசன் என இரட்டை மகன்கள் பிறந்தனர். இரு மகன்களையும தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களை ராமனிடம் ஒப்படைத்தாள். பிறகு தன் தாயான பூமாதேவியிடம் தன்னை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினாள். பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது.