சிலப்பதிகாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
[தொகு] கதைச் சுருக்கம்
சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலன் என்னும் வணிகன், தலைவி கண்ணகி கற்பிற் சிறந்த குடும்பப் பெண், கோவலனின் மனைவி. இருவரும் சோழ நாட்டின் புகார் நகரில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் மாதவி எனும் நாட்டியப் பெண்ணுடன் தொடர்பு கொண்டு தன் மனதை அவளிடம் பறிகொடுத்த கோவலன் கண்ணகியை தவிர்க்கத் தொடங்கினான். பிறகு கண்ணகியையே மறந்த கோவலன் மாதவியுடன் தங்கி தன் செல்வம் அனைத்தையும் கரைத்தான். பிறகு மாதவியை விட்டு கண்ணகியிடம் திரும்பியவுடன் இருவரும் பாண்டி நாடு சென்று பிழைப்பு நடத்த முடிவெடுத்து மதுரை கிளம்பினர். அங்கே சென்ற பொது அவர்களிடம் இருந்த ஒரே செல்வம் கண்ணகியின் இரு சிலம்புகள். அவற்றில் ஒன்றை மதுரை பொற்கொல்லனிடம் விற்கச் சென்றான் கோவலன். அப்போது தொலைந்து போன பாண்டிய அரசியின் சிலம்பை ஒத்து அது இருந்ததால் பொற்கொல்லன் பாண்டிய மன்னிடம் காட்டிக் கொடுத்து விட்டான். மன்னனும் தீர விசாரியாமல் கோவலனுக்கு மரண தண்டனை விதித்தான். கோவலன் மாண்டான். இதை அறிந்து வெகுண்டெழுந்த கண்ணகி நேராக அரச சபை சென்றாள். அங்கே பாண்டிய ராணியின் சிலம்பினுள் என்ன இருந்தன என்று கேட்டாள். அரசியோ முத்து என்றாள். உடனே தன் மற்றொரு சிலம்பை கண்ணகி தரையில் போட்டு உடைத்தவுடன் அதிலிருந்து வெளிப்பட்டதோ மாணிக்கக் கற்கள். தன் தவறை உணர்ந்த அரசன் தனக்கு மரண தண்டனையே கதி என கண்ணகியின் கால்களில் வீழ்ந்தான். ஆனால் கோபம் தணியாத கண்ணகி மதுரை மாநகரையே தன் கோபத்தால் எரித்தாள்.
சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நிலைப்பாடுகளாவன 1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் 2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் 3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
[தொகு] வெளி இணைப்புகள்
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் |
---|
கதைமாந்தர் |
கண்ணகி | கோவலன் | மாதவி | நெடுஞ்செழியன் | மணிமேகலை | மாசாத்துவன் | வசவதத்தை | கோசிகன் |
மாதலன் | கவுந்தி அடிகள் | கோப்பெருந்தேவி |
மற்றவை |
புகார் | மதுரை | வஞ்சி |