சரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்விற்கு அறிமுகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்வு (Critique of Hegel's Philosophy of Right,1843) என்பது ஜெர்மானியத் தத்துவவியலாளர் கார்ல் மார்க்சினால் எழுதப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாகும். எனினும், இது அவர் வாழ்ந்த காலத்தில் அச்சிடப்படவில்லை. ஹெகலின் Elements of the Philosophy of Right எனும் நூலுக்கான திறனாய்வாக இந்நூலை மார்க்ஸ் எழுதினார். சமயம் ஓப்பியம் போன்றது (opiate of the people) எனும் மார்க்சின் கருத்து இந்நூலில் காணப்படும் புகழ்பெற்ற வாசகமாகும்.