உலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலா என்பது தமிழ் மொழிக்குரிய தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் (பிரபந்தங்களுள்) ஒன்றாகும். பேதை முதலான எழுவகைப் பருவ மகளிரும்[1] தன்னைக் கண்டு காதல் கூடும்படி ஒரு தலைவன் வீதியில் உலாப்போந்தான் என்று அவனுடைய அரிய செயல்களைப் பலவகையாகப் புலப்படுத்திக் கலிவெண்பாவால் பாட வேண்டும் என்பது உலாவுக்குரிய இலக்கணம் ஆகும்.
இறைவன் மீதோ, அரசர்கள் மீதோ, வள்ளல்கள் மீதோ உலாப் பாடுதல் பழைய மரபாகும்.
[தொகு] உலாக்கள்
- திருவெங்கையுலா (சிவப்பிரகாச சுவாமிகள், 17ம் நூற்றாண்டு)
[தொகு] அடிக்குறிப்பு
- ↑ எழுபருவ மகளிராவர்:
* பேதை (5 முதல் 7 வயது வரை)
* பெதும்பை (8 முதல் 11 வயது வரை)
* மங்கை (12 முதல் 13 வயது வரை)
* மடந்தை (14 முதல் 19 வயது வரை)
* அரிவை (20 முதல் 25 வயது வரை)
* தெரிவை ( 26 முதல் 31 வயது வரை)
* பேரிளம் பெண் (32 முதல் 40 வயது வரை)