உகர ஊகார உயிர்மெய் எழுத்து வடிவ சீர்திருத்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உகரமும் ஊகாரமும் உயிர்மெய் மூல மெய்யெழுத்தைச் சிதைத்து எழுதப்படுவதால் தமிழில் மேலதிக 36 தனி வடிவங்கள் தேவைப்படுவது தமிழுக்கு ஒரு குறையாக சிலரால் பார்க்கப்படுகின்றது. இவ் 36 எழுத்து வடிவங்களையும் மேலதிக இரு கீற்றுக்களால் குறித்தால் அனைத்து தமிழ் எழுத்துக்களையும் 41+2=43 வடிவங்களால் எழுதமுடியும். அதாவது 12 உயிர்+ 1 ஆய்தம் + 18 மெய் + 12 குறியீடுகள் = 43. இந்த மாற்றம் வேண்டும் என்று சில தமிழ் கணிமையாளர்களும் அறிஞர்களும் வேண்டி வருகின்றனர். இந்த மாற்றம் தமிழை எளிமைப்படுத்தி தமிழை கற்றபதை இலகுவாக்கும் என்றும், தமிழ் கணிமையை இலகுவாக்கும் என்றும், இச்சீர்சிருத்தத்தை வேண்டுவோர் கருதுகின்றார்கள்.
எனினும் பலர் இச்சீர்சிருத்தத்துகு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். தமிழின் வரலாற்று தொடர்ச்சியை தனித்துத்தை இச்சீர்சிருத்தம் குலைக்கும் என்பது அவர்களின் எதிர்ப்புக்குரிய காரணங்கள். இருக்கும் புத்தகங்களில் இப்பாரிய மாற்றத்தை இலகுவாக உள்வாங்க முடியாது என்பதும், தமிழை ஏற்கனவே கற்றவர்களுக்கு புதிய முறைகள் வந்தால் ஏற்பதில் தயக்கம் இருக்கும் என்பதும் இச்சீருத்தத்துக்கு எதிராக இருக்கும் பிற சில காரணிகள்.