இலங்கை வரலாற்று நூல்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை வரலாற்று நூல்கள் பெரும்பாலும் சிங்களவரின் வரலாற்றுப் பதிவாக உள்ளது. தமிழர் பற்றிய தகவல்கள் மிக மிக குறைவாகவே உள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] தீபவம்சம்
முதன்மைக் கட்டுரை: தீபவம்சம்
இலங்கையின் வரலாற்று தகவல்களை தொகுத்து தரமுற்பட்ட முதலாவது நூல் இதுவாகும். நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இந்நூல் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்திற்கு முற்பட்டது.அரசியல் நிகழ்வுகளைவிட பௌத்தமத தகவல்களையே முக்கியத்துவம் கொடுத்து எழுத்தப்பட்டுள்ளது.நம்பகமற்ற , ஒழுங்கமைக்கப்படாத நூலாகும்.
[தொகு] மகாவம்சம்
முதன்மைக் கட்டுரை: மகாவம்சம்
இலங்கை வரலாற்றை சிறந்த முறையில் தொகுத்துத் தந்த முதலாவது நூல் இதுவாகும். 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்த பிக்குவான மகாநாம தேரரால் இயற்றப்பட்டது. கி.மு 6 - கிபி 4 ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் புத்தசமய, அரசியல், பிறநாட்டவர் படையெடுப்பு, நீர்வள நாகரீகம் போன்ற தகவல்களை தருகிறது. இந் நூல் தீபவம்ச, மற்றும் கர்ண பரம்பரை கதைகளை அடிப்படையாக வைத்து முழுவதும் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது.இந் நூலின் அதிகமான பகுதி நடக்க முடியாத,கட்டுக் கதைகளைக் கொண்டுள்ளது. மகாவம்சத்தின் தொடர்ச்சியே சூளவம்சவாகும்
[தொகு] சூளவம்சம்
முதன்மைக் கட்டுரை: சூளவம்சம்
இந் நூல் 4-16 ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களை கூறும் வரலாற்று தொகுப்பாகும்.முழுவதும் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்நூல் மகாவம்சத்தின் தொடர்ச்சியாகும். 13 ம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி தேரவால் எழுதத் தொடங்கப்பட்டு பின் அவரது சீடர்களால் எழுதப்பட்டது.
[தொகு] ராஜவளிய
இது இலங்கை வரலாற்றை தொகுத்து தரும் மற்றுமொரு நூலாகும். 17ம் நூற்றாண்டில் இருந்து பிரிட்டிஷ் காலனியாதிக்க காலம் வரையில் நிகழ்ந்த சம்பவங்களை இந் நூல் எடுத்துரைக்கிறது.முழுவதும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட இந் நூலில் பௌத்த நிகழ்வுகளை விட அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.