கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] செய்தித் தொகுப்பு
- ஆகஸ்ட் 2, 2006 - திருகோணமலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் தொடர்ச்சியாக சமர் நடைபெற்று வருகிறது. திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூதூர் இறங்குதுறையைக் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் அதனைத் தொடர்ந்து முன்னேறினர். புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள இலங்கை இராணுவத்தின் கட்டைப்பறிச்சான் மற்றும் பலாத்தோப்பு, பச்சானூர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் காந்திநகர், பலாத்தோப்பு, தோப்பூர், செல்வநகர் ஆகிய இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர் என்றும் தமிழ்நெட், புதினம் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது வெளியாகும் புதிய தகவல்களின்படி இலங்கை இராணுவம், மூதூர் பிரதேசத்தை மறுபடி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர எதிர்த்தாக்குதலை தொடுத்துள்ளது. இவ்வெதிர் தாக்குதலில் முப்படையும் பயன்படுத்தப்படுகிறது. இம்மோதலின்போது மூதூர் பிரதேசத்தை சேர்ந்த தேவாலயம் ஒன்றும் மூதூர் வைத்தியசாலையும் படையினரின் எறிகணைகளால் தாக்கப்பட்டுள்ளது. மூதூரை சேர்ந்த 8 வயதான சிறுவன் ஒருவன் இத்தாக்குதல்களின்போது கொல்லப்பட்டுள்ளதாக செய்திக தெரிவிக்கின்றன. மூதூர் பிரதேசத்தின் தொலைத்தொடர்பு நிலையம் தாக்கப்பட்டுள்ளதோடு தொலைபேசி, மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.